2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது முறையாக ஐசிசி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா இருப்பதால், இந்த மோதல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இதற்கிடையில், நியூசிலாந்து அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் இந்தியக அணிக்கு கடும் சவால் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.